ஆவாத் நவாப் வாஜித் அலி ஷா என்பவர் இந்த கேய்சர்பாக் அரண்மனையை 1847ம் ஆண்டில் கட்டியுள்ளார். இது அவரது கனவுப்படைப்பாகும். உலகின் எட்டாவது அதிசயமாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாளிகையை அவர் நிர்மாணிக்க துவங்கினார்.
இது சத்தர் மான்சில் எனும் இடத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. தரவாலி கொதி, ரோஷன் உத் தௌலா கொதி மற்றும் சௌலாக்கி கொதி ஆகிய இதர முக்கியமான அம்சங்களும் இந்த கேய்சர்பாக் அரண்மனைக்கு அருகிலேயே அமைந்துள்ளன.
கல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் ராணியுடன் மற்ற கலகக்கார நவாப்கள் ஆலோசனை நடத்தும் இடமாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த அரண்மனையைக்கருதியதால் அவர்கள் இதன் பெரும்பகுதியை அழித்து விட்டனர்.
சபைக்கூடம், கல்லறை வளாகங்கள் மற்றும் நவாப் மன்னர்களின் வசிப்பிடங்கள் ஆகியவை இதனால் அழிந்துபோய்விட்டன.
கம்பீரமான தூண்கள் மற்றும் அலங்கார ஏணிப்படிகள், ஹிந்து குடை அமைப்புகள், விளக்குத்தூண்கள் மற்றும் மூரிஷ் மினாரெட்டுகள் ஆகியவை இந்த மாளிகை வளாகத்தில் காணப்படுகின்றன.
முகலாய பாணியிலான நிகழ்ச்சிக்கூடங்கள் மகுட அமைப்புகள் மற்றும் சிலைகளோடு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்காலத்திய முறைப்படி அரண்மனை மகளிருக்காக தனியே அந்தப்புர வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
12 கதவுகளுடன் வெள்ளைக்கல்லால் கட்டப்பட்டிருக்கும் ஒரு கம்பீர மாளிகை ஒன்றும் இந்த அரண்மனை வளாகத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications