இந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள வனப் பகுதிகளை கண்டு களிக்க வேண்டுமானால், கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அமையும். மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த சரணாலயம்.
இந்த பரந்த சரணாலயம் அடர்ந்த பசுமையான மலைகள் செங்குத்துப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. 35 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் பல வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. செரோ வகை ஆடுகள், முண்ட்ஜாக்ஸ் வகை மான்கள், காட்டு பன்றிகள், கிப்பன் வகை குரங்குகள், சாம்பா மான்கள், ஹூலாக் வகை குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை இங்கே காணலாம். இது போக இந்த சரணாலயத்தில் மதி மயக்கும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
இங்கே சிறிது காலம் தங்க வேண்டுமானால் லுங்க்லெய்யில் உள்ள அல்ப்ஸ்டா ஹோட்டலில் தங்கலாம். இந்த சரணாலயத்தை அடைய ஐசவ்லிலிருந்து வாடகை வண்டியில் வந்தடையலாம்.