கதன் தேக்சொக்லிங் கொம்பா எனப்படும் இந்த மடாலயம் மணாலியிலுள்ள முக்கியமான பௌத்த ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். 1960ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் திபெத்திலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் வந்த அகதிகளுக்கு அடைக்கலம் தரும் நோக்கத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. பகோடா பாணியில் காணப்படும் இதன் மஞ்சள் நிறக்கூரை மற்றும் அடுக்கு கோபுர அமைப்பு பார்வையாளர்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது.
இந்த மடாலயத்தில் ஒரு புத்தர் சிலை காணப்படுவது மட்டுமல்லாமல் பௌத்த மார்க்கத்தை சித்தரிக்கும் ஓவியங்களும் நிறைந்துள்ளன. திபெத்திய ஆக்கிரமிப்பின்போது கொல்லப்பட்ட மக்களின் பெயர்களை கொண்ட பட்டியல் ஒன்றையும் இந்த மடாலயத்தில் பார்க்கலாம்.
மேலும், திபெத்திய கைவினைப்பொருட்கள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவற்றை மடாலய வளாகத்துக்கு அருகிலேயே உள்ள அங்காடியில் வாங்கலாம். இந்த கொம்பா காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துள்ளது.