ஹிமாசல பிரதேசத்திலுள்ள மணிகரன் சுற்றுலாத்தலத்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான மற்றும் படைப்புக்கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு ஆகியோர் சேர்ந்தே திரிமூர்த்திகளாக காட்சியளிக்கின்றனர்.
1905ம் ஆண்டில் 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்திற்கு பிறகு இக்கோயில் சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. குள்ளு பள்ளத்தாக்கிலுள்ள தெய்வங்கள் இக்கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதாக உள்ளூர் நம்பிக்கை நிலவுகிறது.
எனவே வருடமுழுதும் ஏராளமான பக்தி யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.