ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள பிரசித்தமான ஆன்மீக அம்சமான ராமச்சந்திர பஹவான் கோயில் 17ம் நூற்றாண்டில் ராஜ ஜகத் சிங் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. புராணக்கதைகளின்படி, அயோத்தியிலிருந்து இக்கோயில் இங்கு ராம பிரான் மூலமாகவே மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயில் பற்றிய வரலாறு கோயிலின் சுவர்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவை படிக்க முடியாத வகையில் காட்சியளிக்கின்றன.
1889ம் ஆண்டில் ராஜா திலீப் சிங் அவர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் தற்போது ஒரு அறக்கட்டளை மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. மூன்று கூடங்கள் மற்றும் பக்தர்களுக்கான 40 அறைகள் போன்றவற்றை இக்கோயில் வளாகம் கொண்டுள்ளது.