புதலாடா , பதிந்தா-டெல்லி ரயில் பாதையில் அமைந்துள்ளது. இது மான்சாவில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு கத்ரி சகோதரர்களான புதா மற்று லதா வின் நினைவால் இந்த கிராமம் இந்தப் பெயரைப் பெற்றது.
பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்படும் முன், சுதேசி கைதாள் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. இந்த கிராமத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்பது இங்கு அமைந்துள்ள ப்ரஹம் புங்கா குருத்வாரா ஆகும்.
இந்த குருத்வாரா புதலாடாவில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள தோட்ரா என்கிற இடத்தில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இங்கு நடைபெறும் மூன்று முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு ஆன்மீக தேடுதலில் உயர்நிலையை அடைகின்றனர். பதிந்தா புதலாடாவில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது.