மஹாபாரதத்தில் மிக உயர்வுடன் சொல்லப்பட்டிருக்கும் கதாபாத்திரமான விதுரர் உண்மை, நேர்மை, ஞானம் மற்றும் நடுநிலையின் அடையாளமாக கருதப்படுகிறார். மஹாபாரதப்போர் துவங்குவதற்கு முன் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் தங்கள் பெண்டிரை போர்க்காலத்தின்போது பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கு அடைக்கலம் அளிக்க தனது வீடு போதாது என்பதால் விதுரர் அவர்களுக்காகவே ஒரு தனி இருப்பிடத்தை உருவாக்கியுள்ளார். விதுரர் குடில் என்று அது அழைக்கப்பட்டிருக்கிறது.
பின்னாளில் அவருக்கும் துரியோதனனுக்கும் மனஸ்தாபம் ஏற்றபின் அவர் இந்த குடிலில் தனது வாழ்நாளை கழித்ததாக சொல்லப்படுகிறது. இந்த குடிலுக்கு கிருஷ்ணர் விஜயம் செய்து விதுரருக்கு தனது மரியாதையை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் மாவட்டத்தில் பிஜ்னோர் எனும் நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் தாராநகர் எனும் இடத்தில் இந்த விதுரர் குடில் அமைந்துள்