முதுமலையிலும் அதை சுற்றுலும் பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் பல இருக்கின்றன. பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும்.
காலாட்டி நை மற்றும் மொய்யாறு நதியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள வரும் பல விலங்குகளை காணலாம். தமிழ்நாடு சுற்றுலாதுறை & வளர்ச்சி வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவை அளிக்கும் படகு சவாரி மற்றும் காட்டு சவாரிகள் வெளிநாட்டு தாவரங்களையும், விலங்குகளையும் பார்வையிட வாய்ப்பு அளிக்கின்றன.
ஊட்டியில் இருந்து முதுமலை சரணாலயத்திற்கு காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் அருவிகள் ஊடாக செல்லும் போது முப்பத்து ஆறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. விலங்குகளையும் பறவைகளையும் அவற்றின் இயற்கை வசிப்பிடத்தில் காண்பதற்கு ஏற்ற இடங்களாக இவை அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications