அரபிக்கடலும், குன்றுகளும் சுற்றி இருக்க கவின் கொஞ்சும் ஓவியம் போல் காட்சியளிக்கிறது முருதேஸ்வர் கடற்கரை. ராவணன் பிராண லிங்கத்தை இந்த கடலில் வீசி எறிந்த பிறகு இப்பகுதியின் நீர் புனிதத் தீர்த்தமாக கருதப்பட்டு வருகிறது.
இந்தக் கடற்கரை அழகிய முருதேஸ்வர் ஆலயத்துக்காகவும் மிகப் பிரபலம். முருதேஸ்வர் ஆலயத்தில் உள்ள சிலைகளை காணவும், எழில் சிற்பங்களை கண்டு ரசிப்பதர்க்காகவுமே இங்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
இப்பகுதியில் பாரம்பரியமாக நடந்து வரும் எருமை பந்தயம் மிகவும் பிரபலம். பயணிகள் கண்டிப்பாக அதை தவற விட்டு விடக்கூடாது.
இது தவிர பயணிகள் முருதேஸ்வர் ஆலயத்தின் உயரமான சிவன் சிலையையும் கடற்கரையிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.
அதனுடன் கடலில் மீன்பிடிப்பது, படகு சவாரி செய்வது, கடற்கரையில் சூரியக் குளியல் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்களின் ஓய்வு நேரத்தை பயணிகள் இன்பமயமாக களிக்கலாம். முருதேஸ்வர் கடற்கரைக்கு நேரம் இருப்பின் பயணிகள் எந்த காலங்களிலும் வரலாம்.



Click it and Unblock the Notifications