முருதேஸ்வர் வரும் பயணிகள் சிவன் சிலையை பார்க்கும் மாத்திரத்தில் சொக்கிப் போவது நிச்சயம். இந்த 123 அடி சிவன் சிலை உலகிலேயே இரண்டாவது உயரமான சிலையாக கருதப்படுகிறது.
இச்சிலையை சிவமோக காசிநாத் மற்றும் அவருடைய மகன் ஸ்ரீதர் ஆகியோர் செய்து முடித்தனர். இதை செய்து முடிக்க இரண்டு வருடங்கள் ஆயின.
இதன் மீது நேரடியாக சூரிய வெளிச்சம் படும் படியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் , பகல் நேரங்களில் சிலை தக தகவென மின்னும் காட்சியை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இது ஆரம்பத்தில் நான்கு கைகளுடன், தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அப்பகுதியில் வீசிய பலத்த கடல் காற்று காரணமாக உடுக்கை பிடித்திருந்த கை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடுமையான மழையால் தங்க முலாமும் அழிந்து போயிற்று.