மெலடி வேர்ல்டு மற்றும் வாக்ஸ் மியூசியம் என்றழைக்கப்படும் மெழுகு அருங்காட்சியகமும் மைசூரில் சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த மியூசியம் 2010 அக்டோபரில் துவங்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் இசைக்கருவிகளை சேகரித்து பார்வைக்கு வைப்பதாகும்.
இங்கு 100 தத்ரூப மெழுகு சிலைகளும் 300 வகையான இசைக்கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான இசைக்கருவிகளும் பஞ்சாபி, பாங்க்ரா, வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த பாரம்பரிய இசை, ஜாஸ், கர்நாடக இசை, மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாகரிகத்தை சேர்ந்த இசை , ராக் இசை போன்ற பல்வேறு வகையான இசை வடிவங்கள் மற்றும் இசைக்குழுக்களின் இசையும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த இசை அருங்காட்சியகத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை பார்த்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications