நாகர்ஹொளே வரும் பயணிகள் கண்டிப்பாக லக்ஷ்மண தீர்த்த ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இராமேஸ்வரா கோயிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இதன் முதன்மை தெய்வமான சிவபெருமானை வழிபடுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரியின் போது, நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.
இங்கே ஓடிக்கொண்டிருக்கும் லக்ஷ்மண தீர்த்த நதி இராமாயண காலத்திலிருந்தே இருப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ஒரு முறை சீதா பிராட்டியார் தாகத்தால் தவித்த போது, லக்ஷ்மணன் வில்லில் நாணைப் பூட்டி தரையை நோக்கி அம்பு எய்ததாகவும், அதிலிருந்து பொங்கிப் பெருகி வந்ததே இன்று லக்ஷ்மண தீர்த்த நதியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.