Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரி கடற்கரைக்குச் செல்கிறீர்களா? இன்றிரவு முதல் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை - உஷாராக இருங்கள்!

கன்னியாகுமரி கடற்கரைக்குச் செல்கிறீர்களா? இன்றிரவு முதல் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை - உஷாராக இருங்கள்!

கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் இன்றிரவு ‘கள்ளக்கடல்’ (Swell Surge) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல புயல் எச்சரிக்கை மையம் (ACWC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 1.2 முதல் 1.7 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும். 16 முதல் 18 விநாடிகள் இடைவெளியில் வரும் இந்த அலைகள், கரைப்பகுதியை மிகக் கடுமையான விசையுடன் தாக்கும். இந்த எச்சரிக்கை இன்று (செப்டம்பர் 18) இரவு 8:30 மணி முதல் நாளை (செப்டம்பர் 19) காலை 11:30 மணி வரை அமலில் இருக்கும். எனவே, மீனவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் சிறிய படகுகளை இயக்குபவர்கள் கடலில் இறங்குவதையோ அல்லது கரைக்கு அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் கூட்டப்புளி முதல் கூடுதாழை வரையிலான கடற்கரைப்பகுதியிலும் ராட்சத அலைகள் சீறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையில் காற்று குறைவாக இருப்பது போல் தோன்றினாலும், திடீரென இடைவெளி விட்டு அலைகள் மேலெழும்பி சீறும். இதனால் விடியற்காலையில் கடற்கரைக்குச் செல்வோர் மற்றும் படகுத்துறைகளில் இருக்கும் பக்தர்கள் எதிர்பாராத அலை சீற்றத்தால் ஆபத்தில் சிக்கக்கூடும். படகுகளை இயக்குபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், துறைமுக எச்சரிக்கை கூண்டுகளை கவனித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.

Kanyakumari Swell Surge Warning: Coastal Alert for Tourists and Fishermen (September 2026)

கன்னியாகுமரி கள்ளக்கடல் எச்சரிக்கை: சுற்றுலா பயணிகள் கவனிக்க வேண்டியவை

நீண்ட இடைவெளியில் வரும் அலைகள் (Long-period swells) வெகுதொலைவில் இருந்து புறப்பட்டு, ஆற்றல் குறையாமல் ஆழமற்ற கடற்கரைகளில் திடீரென உயர்ந்து சீறும். பாறைகள் மற்றும் தடுப்புச் சுவர்களில் மோதி இவை கரையை நோக்கி மிக வேகமாகக் தள்ளும். இதனால் எதிர்பாராத நேரத்தில் மனிதர்கள், உபகரணங்கள் மற்றும் சிறிய படகுகள் கூட கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளது. படகு சவாரி செய்வோர் மற்றும் பொழுதுபோக்கிற்காக வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கடலோரப் பகுதியில் அவ்வப்போது பெரிய அலைகள் வரிசையாக வந்து தாக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

எச்சரிக்கை நேரத்தில் குறிப்பிடப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் குளிப்பது, பாறைகள் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்க்கவும். குழந்தைகளை அலைகள் வந்து தொடும் எல்லைக்கு அப்பால் பாதுகாப்பாக வைத்திருங்கள்; பாறைத் தடுப்புகள் (Tetrapods), அலைதாங்கிகள் மற்றும் பாசி படிந்த பாறைகள் மீது ஏற அனுமதிக்காதீர்கள். சிறிய படகுகள் அலைகள் சீறும் பகுதிகளைக் கடப்பதை ஒத்திவைக்க வேண்டும், கண்டிப்பாக லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும் மற்றும் பாதுகாப்பான துறைமுகங்களிலேயே இருக்க வேண்டும். துறைமுக சமிகஞைகள் மற்றும் சென்னை மண்டல புயல் எச்சரிக்கை மையத்தின் புதிய அறிவிப்பைச் சரிபார்த்த பிறகே படகுகளை இயக்க வேண்டும். கடலோரப் பாதுகாப்புப் படையினரின் வழிகாட்டுதல்களையும் சிவப்பு நிற எச்சரிக்கைக் கொடிகளையும் கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி கள்ளக்கடல் எச்சரிக்கை: முக்கியத் தகவல்கள்

மாவட்டம் பாதிக்கப்படும் பகுதிகள் எச்சரிக்கை காலம் (IST) அலை இடைவெளி அலை உயரம் முக்கிய அறிவுறுத்தல்
கன்னியாகுமரி நீரோடி – ஆரோக்கியபுரம் செப் 18, இரவு 8:30 – செப் 19, காலை 11:30 16–18 விநாடிகள் 1.2–1.7 மீட்டர் கடலில் இறங்குவதைத் தவிர்க்கவும்; படகு ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்

தமிழ்நாடு கடலோர கள்ளக்கடல் எச்சரிக்கை: பயணத் திட்டம் மற்றும் கண்காணிப்பு

சூரிய உதயத்தைப் பார்க்கத் திட்டமிடுபவர்கள், ஆபத்தான திறந்தவெளி கடற்கரைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, மேடான உள்நாட்டுப் பகுதிகள் அல்லது பாதுகாப்பான நடைபாதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கடல் சீற்றம் தணியும் வரை பாரம்பரிய இடங்கள், உள்நாட்டுத் திருக்கோவில்கள் மற்றும் பிற சுற்றுலா இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். போட் சவாரி மற்றும் படகுப் போக்குவரத்து ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதால், உங்கள் பயண திட்டத்தில் கூடுதல் நேரத்தை ஒதுக்குவது நல்லது. கடலலை தடுப்புச் சுவர்கள் அருகே வாகனம் ஓட்டுபவர்கள், அலை மோதும் இடங்களில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பதற்றமான கடற்கரை அனுபவத்தை விட அமைதியான உள்நாட்டு சூரிய உதயக் காட்சியே சிறந்தது.

கடற்கரைக்குக் கடற்கரை அலைகளின் தீவிர மாறுபடலாம்; ஆனால் இந்த எச்சரிக்கை காலம் மிகக் குறுகியது மற்றும் தெளிவானது. இன்று மற்றும் நாளை சென்னை மண்டல புயல் எச்சரிக்கை மையத்தின் அறிவிப்புகள், INCOIS கடல் நிலை முன்னறிவிப்பு அல்லது 'சமுத்ரா' (Samudra) செயலியைத் தொடர்ந்து கவனியுங்கள். இந்தத் தகவல்களை மீனவர்களுடனும் உடன் பயணிப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். கடற்கரை மூடல்கள் மற்றும் சிவப்பு கொடி எச்சரிக்கைகளை கண்டிப்பாக மதிக்கவும். கன்னியாகுமரி பயணம் ஆபத்தான அலைகளின் நினைவாக இல்லாமல், அழகான சூரிய உதயத்தின் நினைவாக அமையப் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுங்கள்.

More News

    Read more about: kanyakumari
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+