கிழக்கின் பிரெஞ்சு ரிவியரா என்று அன்புடன் அழைக்கப்படும் புதுச்சேரி சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு வார இறுதி சுற்றுலாத் தலம்! சென்னை மட்டுமல்ல, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் இருந்தும் வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது! இதனாலோ என்னவோ புதுவையில் திரும்பும் திசையெல்லாம் பப்களும், விடுதிகளும், ஹோட்டல்களுமாகவே காணப்படுகிறது. ஆனால், இவற்றில் பல அனுமதியின்றி செயல்படுகின்றன தெரியுமா?
அனைத்து விதமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதுவை
புதுச்சேரி, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் ஒரு வசீகரிக்கும் சுற்றுலாத் தலமாகும். பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, அமைதியான கடற்கரைகள், ஆன்மீக தலங்கள் மற்றும் துடிப்பான கலாச்சார காட்சி ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன், புதுச்சேரி அனைவருக்கும் ஏதாவது ஒன்றை வழங்குகிறது. நீங்கள் பண்டைய தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை ஆராயும் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும், புகழ்பெற்ற ஆரோவில் மற்றும் ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமத்திற்கு வருகை தரும் ஆன்மீகத்தை தேடுபவராக இருந்தாலும் அல்லது அமைதியான கடலோர நடைபாதைகளை அனுபவிக்கும் ஓய்வுப் பயணியாக இருந்தாலும், புதுச்சேரியின் வசீகரம் அதன் பல்வேறு சலுகைகள் மற்றும் அன்பான விருந்தோம்பலில் உள்ளது. நகரத்தின் வளமான பாரம்பரியம், அதன் உலகளாவிய சூழ்நிலையுடன் இணைந்து, ஒவ்வொரு பயணிக்கும் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை உறுதி செய்கிறது.
எங்கு திரும்பினாலும் பப்கள் மற்றும் ரெஸ்டோபார்கள்
புதுச்சேரியில் ஏராளமான பப்கள் மற்றும் ரெஸ்டோபார்கள் உள்ளன, இது இரவு வாழ்க்கை ஆர்வலர்களுக்கு ஒரு துடிப்பான இடமாக அமைகிறது. பிரெஞ்சு மற்றும் இந்திய கலாச்சாரங்களின் தனித்துவமான கலவை அதன் சமையல் மற்றும் பானக் காட்சி வரை நீண்டுள்ளது, இங்கு பார்வையாளர்கள் பல்வேறு வகையான உணவு வகைகளுடன், குளிர்பானங்கள், பானங்கள், கையால் தயாரிக்கப்படும் பானங்கள் என புதுவை நோக்கி படையெடுத்து வரும் இளசுகளுக்கு ஒரு தனித்துவ அனுபவத்தை வழங்குகிறது நம் புதுச்சேரி. வார இறுதியை கொண்டாட வரும் கூட்டத்தினரை இழுக்கும் விதமாகவும், வருவாய் சம்பாதிக்கும் விதமாகவும் புதுவையில் பல வீடுகள் அனுமதியின்றி ஹோட்டல்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
அனுமதியின்றி விடுதிகளாக மாற்றப்படும் வீடுகள்
புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் ஒயிட் டவுன் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரத்தின் பிற பகுதிகளில் தங்க விருப்பப்படுவதால், இப்பகுதியில் குடியிருக்கும் பலரும் தங்களது வீடுகளை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாக்கி விட்டனர். இதில், போதிய பாதுகாப்பு வசதி இல்லை. முன்பு குறைந்த கட்டணம் வாங்கியவர்கள் தற்போது அதிகளவில் வாங்குகின்றனர். பல இடங்களில் அறிவிப்பு பலகையே இல்லாமல், ஆன்லைன் மூலமே விடுதிகளுக்கான பதிவு நடக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீடுகளை சற்றே மாற்றம் செய்து, அனுமதியில்லாமல் பல விடுதிகள் இருக்கின்றன. இது சரியானது அல்ல. இதில் அரசின் நடவடிக்கை அவசியம். அரசு தான், சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புகார் தெரிவிக்கும் வசதியையும், அதற்கான எண்களையும் பொது இடங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வீடுகளாக மாறிய இந்த விடுதிகளில் தங்கியவர்களில் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் அடுத்து பொங்கல் தொடர் விடுமுறை வர இருக்கிறது. இதுபோன்ற தொடர் விடுமுறைகளை குறிவைத்து, இப்படி தாறுமாறாக கட்டணத்தை வசூலிக்கும் இந்த திடீர் விடுதிகள் மீது புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.



Click it and Unblock the Notifications





