Search
  • Follow NativePlanet
Share
» »பெரம்பூர் சென்னையின் நான்காவது பெரிய ரயில் டெர்மினஸாக மாறப் போகிறது தெரியுமா?

பெரம்பூர் சென்னையின் நான்காவது பெரிய ரயில் டெர்மினஸாக மாறப் போகிறது தெரியுமா?

சென்னையின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்காவது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையம் மாறப் போகிறது. இந்தியாவில் ஒரு பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு புதிய பொலிவு கிடைக்கப்போகிறது. வில்லிவாக்கத்தில் முதலில் திட்டமிடப்பட்ட சென்னைக்கான நான்காவது ரயில் முனையம் இப்போது பெரம்பூரில் நிறுவப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. பெரம்பூரில் இந்த வளர்ச்சிக்கு போதுமான நிலம் இருப்பதாகவும், அதற்கான முன்மொழிவு இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது!

Indian Railways

வரலாற்று முக்கியத்துவம் கொண்டுள்ள பெரம்பூர் ரயில் நிலையம்

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் நிறுவப்பட்ட பெரம்பூர் ரயில்வே டெர்மினல் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரம்பூர் ஒரு பெரிய குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதியாகும், இது ரயில் முனையத்தை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான மையமாக மாற்றுகிறது.

தமிழகத்தின் ரயில்வேக்கு கணிசமான பட்ஜெட்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம் பேசுகையில், தமிழகத்தின் ரயில்வேக்கு கணிசமான பட்ஜெட் ஊக்கத்தை அறிவித்தார். 2024-25 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு ரூ.6,362 கோடி கிடைக்கும், இது கடந்த ஆண்டு ரூ.6,080 கோடியாக இருந்தது. 33,467 கோடி மதிப்பிலான தமிழகத்தில் 77 ரயில் நிலையங்களின் வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை வைஷ்ணவ் எடுத்துரைத்தார்.

Indian Railways

முக்கிய இணைப்பாக விளங்கும் சென்னை ரயில்வே

தமிழக தலைநகரான சென்னை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு ஒரு முனையமாக செயல்பட்டு வருகிறது. வேறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் அண்டை மாநிலத்தவர் கூட சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து தங்கள் மாநிலங்களுக்கு ரயில் மூலமாக செல்வதுண்டு. இதனால் சென்னையில் ரயில் போக்குவரத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என அனைத்து சேவைகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது.

தென் மாவட்ட ரயில்களுக்கான முனையம்

வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி(தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் சென்னை எழும்பூருக்கு வந்து செல்கின்றன. இதில் எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டது, அதை 3வது முனையமாகவே தற்போது மாற்றிவிட்டது. ஆனால், இது தற்போது தென் மாவட்டங்களுக்கான ரயில் முனையமாக செயல்படுகிறது.

சென்னையின் 4 ஆவது ரயில் முனையம்

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட மாநில ரயில்களுக்கான முனையமாக பெரம்பூர்

அதிகரிக்கும் வெளிமாநில ரயில் பயணிகள் எண்ணிக்கையும், மாநகர போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு பெரம்பூரில் இந்த ரயில் முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள இடத்தில் ரூ.428 கோடி செலவில் ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இங்கிருந்து பெரும்பாலான வடக்கு நோக்கி செல்லும் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

Read more about: indian railways irctc
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+