பர்வனூவிலிருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சுபது, இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கண்டோன்மெண்ட் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் இப்போது இந்திய இராணுவத்திலுள்ள கூர்க்காவின் ஒரு ராணுவ மையமாக உள்ளது.
இயற்கையின் மடியில் தங்கியுள்ள சுபது, மூங்கில், பைன் காடுகளால் சூழப்பட்டு, யூக்கலிப்டஸ் மரங்களால் தழுவப்பட்டுள்ளது. இந்த இராணுவ நகரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டமைப்புகளுள் ஒன்றாக 1880 களில் கட்டப்பட்ட வைஸ்ராய் லாட்ஜ் உள்ளது.
இந்த இலக்கு வழியாக செல்லும் உயர் இராணுவ அதிகாரிகளால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் பழைய மயானம் ஒன்று பார்வையாளர்களை மேலும் கவர்கிறது. பயணிகள் கூர்கா அருங்காட்சியகத்துக்கும், சுபதுவில் உள்ள கூர்கா கோட்டையின் இடிபாடுகளுக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications