பத்தனம்திட்டா நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் பெருந்தேனருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி 100 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுவதும், அதன் பிறகு பம்பை நதியுடன் கலக்கின்ற காட்சியும் பயணிகளின் நினைவை விட்டு என்றும் அகலாது. அதோடு இந்த அருவியின் சுற்றைமைப்பு இதை அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கிறது.
பெருந்தேனருவி என்பதற்கு 'பெருக்கெடுத்து ஓடும் தேனின் வெள்ளம்' என்று பொருள். இதன் பெயருக்கு தகுந்தார் போல தேன் அருவியாகவே திகழ்ந்து வரும் இந்த அருவி உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications