குருத்வாரா கோவிந்த் படித்துறை கங்கை நதியின் கரையோரத்தில், தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப்பிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ளது. கங்கன் படித்துறை என்றும் அழைக்கப்படும் இந்த படித்துறையில், குரு கோவிந்த் சிங் சிறு குழந்தையாக இருக்கும் போது தன் தங்க வளையலை தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.
குரு கோவிந்த் சிங்கின் இளம்பிராயம் தொடர்பான பல கதைகள் இங்கு உலவி வருவதால் இந்த இடம் மிகவும் சிறப்பானதாகக் கொண்டாடப்படுகிறது. குரு கோவிந்த் சிங் சிறு பையனாக இருந்த போது தன் சகாக்களுடன் கங்கைக் கரையில் விளையாடி வந்ததாக நம்பப்படுகிறது.