பீகாரின் நிர்வாக மாவட்டமான மேற்கு சம்பரன் சுற்றுலாவிற்கு ஏற்ற பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பச்சைப் பசேலென்ற காடுகள், சமவெளிகள், பலவகையான வனவிலங்குகள், பறவைகள் என பார்ப்பதற்கு இங்கு பல விசயங்கள் உள்ளன.
பாரம்பரியமிக்க நகரமான மேற்கு சம்பரானின் சுற்றுலாத் துறை நகர் முழுவதையும் கண்டுகளிக்க வழி செய்கிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களின் இங்கு பயணிப்பது வசதியாக இருக்கும்.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
வால்மிகி தேசியப் பூங்கா, திரிவேணி கரை, பவனாங்கரி, பிக்நதோஹரி, சுமேஷ்வர் கோட்டை, பிருந்தாவனம், நந்தகார்ஹ், அசோகா ஸ்தூபிகள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன.
பயணிக்க சிறந்த பருவம்
குளிர்காலம் முழுதும் மிதமான வானிலை நிலவுவதால் அக்டோபரில் இருந்து மார்ச் வரை பயணிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.
மேற்கு சாம்பரன் பயணிக்கும் வழிகள்
மற்ற நகரங்களுடன் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்களை மேற்கு சம்பரான் கொண்டுள்ளதால் பயணிகள் வசதியாக பயணிக்க முடிகிறது.