ஜலான் இல்லம் என்றும் அழைக்கப்படும் குயிலா இல்லம், தனியாருக்குச் சொந்தமான ஒரு குடியிருப்பாகும். 1919 ஆம் ஆண்டிலிருந்து ஜலான் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறைகளின் வசிப்பிடமாக விளங்கிய குயிலா இல்லம், கலைப்பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்களின் சேகரத்துக்கு பெயர் பெற்றதாகும்.
இந்த சேகரம், திரு ராதா கிருஷ்ண ஜலானின் தனிப்பட்ட சேகரம் மற்றும் சாதனையாகும். மிகவும் அன்பான ஜலான் குடும்பம் இங்கு வரும் விருந்தினர்களை முன்பதிவு முறை மூலமோ அல்லது அழைப்பு விடுத்தோ இன்முகத்தோடு வரவேற்கின்றனர்.