ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கடசித்தேஷ்வரா கோயில் ஐந்து அடுக்குகளை கொண்ட ஒரு உயரமான பீடத்தின்மீது அமைந்துள்ளது. கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான சிவன் சிலைக்காக இக்கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் நகல் வடிவமே ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களுடன் ஏக காலத்தில் கட்டப்பட்டுள்ளன. இரண்டு கோயில்களுமே நகரா பாணியில் ஏஹோல் ஸ்தலத்திலுள்ள குச்சிமல்லி குடி எனும் கோயிலைப்போன்றே உருவாக்கப்பட்டுள்ளன.ஒரு சதுரமான கர்ப்பகிருகத்தில் பீடத்தின் மீது அமைந்த ஒரு சிவலிங்கமும், செவ்வக வடிவ மண்டபமும் ஒரு பூஜை மேடையும் காணப்படுகிறது. ரேகாநகர பாணியில் அமைந்து வளைவு கோபுர அமைப்புடன் வழக்கமான கோபுரவாயில் அமைப்பும் இங்கு காணப்படுகிறது.
பயணிகள் இந்த கோபுர வாசல் அமைப்பில் நாட்டிய கோலத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் போன்றவற்றைக்காணலாம். கர்ப்பகிருக சுவற்றில் உள்ள மாட அமைப்புகளில் ஹரிஹரன் (மேற்கு), அர்த்தநாரீஸ்வரர்(வடக்கு) மற்றும் சிவன் (தெற்கு) போன்ற தெய்வங்களின் சிலைகளைக்காணலாம்.
பட்டடக்கல் பகுதிக்கு வருகை தரும் எல்லா பயணிகளும் தவறாமல் விஜய செய்ய வேண்டிய அம்சங்களுள் இந்த கோயிலும் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications