விருபாக்ஷர் கோயில் 740ம் ஆண்டில் ராணி லோகமஹாதேவியால் (திரிலோக்யமஹாதேவி) கட்டப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த புராதன வடிவமைப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள சிறந்த பழமையான கோயில்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. மேலும் இந்த விருபாக்ஷர் கோயிலின் முழு வடிவமைப்பும் காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயிலை ஒட்டி இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விசேஷமாகும்.இந்த கோயிலில் பக்தர்கள் உக்ரநரசிம்மர், நடராஜர், ராவணனுக்ரஹா மற்றும் லிங்கோத்பவா போன்ற சிற்பங்களை காணலாம். இதன் உள் வடிவமைப்பு பல நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் மற்று அலங்கார கலையம்சங்களைக்கொண்டுள்ளது.
ராமாயணம், மஹாபாரதம், கிரத்தர்ஜுன்யம் போன்ற காவியங்களிலிருந்து பல சம்பவங்கள் இந்த கோயிலில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் இதர பகுதிகளில் பல ஜியோமிதி வடிவங்கள், தாவர மற்றும் மலர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.விருபாக்ஷர் கோயிலின் கிழக்குப்பகுதியில் ஒரு நந்தி மண்டபத்தையும் பக்தர்கள் காணலாம். நாற்புறமும் திறந்த ஒரு முற்றத்தின் உள்ளே ஒரு மேடையின் மீது நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கோயிலின் கிழக்கு வாசலில் காணப்படும் கல்வெட்டுக்குறிப்பில் இரண்டாம் விக்கிரமாதித்ய மன்னர் எப்படி காஞ்சியை வெற்றி கண்டார் என்ற விவரிப்பு காணப்படுகிறது.
வரலாற்றின் முக்கியமான அடையாளமாக விளங்கும் இந்த கோயில் பட்டடக்கல் ஸ்தலத்தில் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய கோயிலாகும்.