நேபாள இராணுவத்தால் அழிக்கப்பட்ட அரண்மனையின் சிதைவுகளே ராப்டென்ட்ஸே சிதைவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரண்மனை மற்றும் கோர்டென் (பிரார்த்தனை மண்டபம்) ஆகியவை சிக்கிமில் இருந்து வந்த அரச வம்சத்தின் நினைவுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன.
சிக்கிமின் முதல் தலைநகரமாக யுக்ஸோமும், இரண்டாம் தலைநகரமாக ராப்டென்ட்ஸேயும் இருந்துள்ளன. யுக்ஸோமில் உள்ள துப்தி மடாலயத்திலிருந்து துவங்கும் பௌத்த மத சுற்றுப் பயணங்களில் வரும் பல்வேறு மடாலயங்களில் ஒன்றாகவும் ராப்டென்ட்ஸே சிதைவுகள் உள்ளன.
ராப்டென்ட்ஸே சிதைவுகள் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு பிரிவில் தான் அரச குடும்பத்தினர் வசித்து வந்தனர். அங்கே, அரச குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்த இடமான 'டாப் லாகாங்' என்ற சிதைவுகளையும் இங்கு காண முடியும்.
இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்நினைவுச் சின்னம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications