பாண்டிச்சேரியிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று தூய இருதய கிறிஸ்து தேவாலயமாகும். கோதிக் கட்டிடக்கலையையொட்டிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை வர வைக்கும் இடமாகும்.
இந்த தேவாலயத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் காலங்களை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் கண்ணாடி ஓவியங்கள் மிகவும் கவனிக்கத் தக்க அம்சங்களாகும்.
இந்த தேவாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அமைதி மற்றும் நிம்மதியை பெறும் சூழ்நிலையை அனுபவிப்பார்கள். இந்த தேவாலயத்தின் முதல் பிரார்த்தனைக் கூட்டம் டிசம்பர் 17, 1907-ஆம் ஆண்டு நடந்தது.
இந்த தேவாலயத்தை சேர்ந்த கிராமங்கள் 1908-ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. 2008-ம் ஆண்டில் இந்த தேவாலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.