வீதி உலா கடற்கரை என்று அழைக்கப்படட பாண்டிச்சேரி கடற்கரை, பாண்டிச்சேரியின் முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றாகும். அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் அழகிய கடற்கரையாக இருந்த இதன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த வீதி உலா கடற்கரையில் தற்பொழுது கற்பாளங்கள் செயற்கை சுவர்களாக வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரெஞ்சு மொழியல் 'லா பாஃக்ஸ்-ப்ளேஜ்' என்ற பெயருக்கு 'பொய்யான கடற்கரை' என்று அர்த்தம் உண்டு, இதே பெயரில் ஒரு கடற்கரையொன்று இந்த கடல் சுவர்களுக்கு மேலே ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மாலை வேளைகளில், இந்த கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் காலாற நடந்து செல்ல ஏற்ற இடமாக இந்த கடற்கரை மாறிவிடுகிறது. பாண்டிச்சேரி நகரின் முக்கிய பார்வையிடங்களை பார்த்துக் கொண்டே செல்லும் வகையில் 1.5 கிமீ நீளத்திற்கு இந்த கடற்கரை நீண்டிருக்கிறது.
எனவே இந்த கடற்கரை இன்னமும் பார்வையாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications