ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அறிவுரையின் பேரில் வில்லேஜ் மசூதி 1978-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வில்லேஜ் மசூதி எழுப்பப்பட்டுள்ள இடத்தில் இஸ்லாமிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்த இடத்தை முன்னர் தோண்டிய பொழுது சில விபரீதமான விபத்துகளும், துர்சம்பவங்களும் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே பாபாவின் அறிவுறுத்தலின் படி கட்டப்பட்ட இந்த மசூதியில் கெட்ட சம்பவங்கள் அல்லது விபத்துகள் நடப்பது நின்று போயிற்று.