வட விருக்ஷம் அல்லது தியான மரம் என்று அழைக்கப்படும் ஆலமரம் பிராஷாந்தி நிலையத்தின் வளாகத்துக்குள் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் நடப்பட்டது. இந்த மரத்தின் அடியில் கனமான உலோகத் தகடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு தியானம் செய்ய வெகு பொருத்தமான இடமாக இருப்பதுடன், தியானம் செய்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாகவும் இந்த ஆலமரம் திகழ்ந்து வருகிறது. மேலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி இடம் இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சூரியோதயத்துக்கு முன்பும், சூரிய அஸ்த்தமனத்துக்கு பின்பும் இங்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.