ஹனுமான் கோயில் அல்லது ஆஞ்சநேய சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் கோயில் கோருபுரம் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை அடையும் போது சத்ய சாய் பாபாவால் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஒன்று உங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பை அளிப்பது போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஹனுமான் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் காலடியில் ஒரு சிறு குளம் உள்ளது. இந்த சிறிய குளம் ஆஞ்சநேயேரின் கண்ணீராகவும், இராமபிரான் மீது அவர் வைத்திருந்த பக்தியை பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.