இந்து மதத்தின் படி கண்டிப்பாக பார்க்க வேண்டிய 24 தீர்த்தங்களில் ஒன்றாக விழுதி தீர்த்தம் அறியப்படுகிறது. ஸ்ரீ இராமர் தனது அம்பு ஒன்றினை கடலில் விட்டு தனது மனைவிக்கு குடிநீர் பெற்ற போது இந்த தீர்த்தம் உருவானதாக சொல்லப்படுகிறது. அம்பு தாக்கியதால் உருவான இந்த நீர்ச்சுனையின் தண்ணீர் மிகவும் சுவையுள்ளதாக இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் குளித்து தங்களுடைய பாவங்களை களைவதற்காக வந்து செல்கின்றனர். பாம்பனுக்கு அருகில் உள்ள தங்கச்சிமடம் என்ற கிராமத்தில் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது.
மத முக்கியத்துவம் தவிர, இந்த தீர்த்தம் உள்ளூர் மக்களுக்கும் மிகவும் முக்கியமான இடமாகவும் உள்ளது. 1979-ல் இங்கு கட்டப்பட்ட வடிவமைப்பு, இந்த தீர்த்தத்தின் நீரினை இந்த ஊர் மக்களுக்கான குடிநீராக பயன்படுத்த உதவி வருகிறது.
எனினும், இந்த வடிவமைப்பு இங்கே நிலவி வரும் உப்பு காற்றினால் பாழ்பட்டு, இம்மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதே போன்ற மற்றுமொரு வடிவமைப்பினை அரசு உதவியுடன் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.