ராம்கரில் முகாமிடுவது சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்றதாகும். அதற்கு மிகவும் தோதாக அமைந்துள்ளது கோசி ஆறு. பச்சை பசுமையும் ஓவியம் போன்ற இயற்கை அழகும் கொண்ட இந்த இடத்தில் முகாமிடுவது ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும்.
ராம்கரிலுள்ள மலை பகுதிகளில் மலை ஏறுதல் மற்றும் மலை இறங்குதல் போன்ற சாகசங்களில் ஈடுபடலாம். மலை ஏறுவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் சரி, இருப்பவர்களுக்கும் சரி, இந்த இடம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மலைகளில் பைக் ஓட்டுவது ராம்கரில் மகிழ வேண்டிய துணிச்சல் மிக்க விளையாட்டாகும். இந்த இடத்தில் உள்ள வன பகுதியை சுற்றி பார்க்க இது சிறந்த வழியாகும்.
கோசி ஆற்றில் மீன் பிடிப்பது நல்ல வேடிக்கையாக இருக்கும். இந்த ஆறு மகசீர் என்ற மீனின் இனப்பெருக்க மையமாக விளங்குகிறது. உள்ளூரில் இருக்கும் ஓய்வு விடுதிகள், கோசி ஆற்றில் மீன் பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறது.