பின்சார் மஹாதேவ் கோயில் எனும் இந்த முக்கியமான கோயில் ராணிக்கேத் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 2480 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த இடம் செழிப்பான தேவதாரு மரங்கள் நிரம்பிய வனப்பகுதியால் சூழப்பட்டிருக்கிறது.
சிவபெருமானுக்கான இந்த கோயில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் கட்டி இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டதாக உள்ளூர் நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
வைகுண்ட சதுர்த்தசியின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். குழந்தை வரம் வேண்டி தங்கள் உள்ளங்கையில் தீபம் ஏற்றி அவர்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
மஹேஷ்மர்தினி, ஹர் கௌரி மற்றும் விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகளை கொண்டிருக்கும் இந்த கோயில் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கின்றது.
மஹேஷ்மர்தினி சிலைப்பீடத்தில் நாகர்லிபி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இது 9ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக கருதப்படுகிறது. இக்கோயில் பிந்தேஷ்வரர் கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.பிது எனும் மன்னரால் அவரது தந்தை பிந்து என்பவரில் நினைவாக கட்டப்பட்டதால் இப்பெயர் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.