ரணதம்போர் மலையடிவாரத்தில் உள்ள இந்த கலையம்சம் நிறைந்த மாளிகை ஜெய்பூர் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. பல தலைமுறைகளை சேர்ந்த மன்னர்களால் இது வேட்டை மாளிகையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் வனத்துறை விருந்தினர் இல்லமாக பயன்படும் இதில் எல்லா நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஜோகி மஹால் மாளிகையிலிருந்து அருகிலுள்ள பதாம் தலாவ் ஏரியை நன்கு ரசிக்க முடிவது இதன் விசேஷமாகும்.
இந்த மாளிகை ஸ்தலத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான ஆல மரம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆலமரம் என்ற புகழுடன் அறியப்படுகிறது.