சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சக்கும்பரி பகுதியில் அமைந்திருக்கும் மிகப் பிரசித்தி பெற்ற சக்கும்பரி தேவி ஆலயம், சஹரன்பூரிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயத்தைப் பற்றிய வரலாற்றுப் பின்னனி சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஆலயம் மிக நீண்ட கால வரலாற்றுப் பின்னனியைக் கொண்டிருக்கிறது என்று இந்த பகுதியில் உள்ள மக்கள் மிக உறுதியாக நம்புகின்றனர்.
இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் கடவுள் சிலைகளைப் பார்ப்பதற்கு மிகவும் பழையதாக தெரியாது. ஆனால் இவை அனைத்தும் மரதா காலத்தில் அமைக்கப்பட்டன என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
வேறு சிலரோ ஆதி சங்கராச்சாரியர் காலத்தில் இந்த சிலைகள் அமைக்கப்பட்டன என்று கருதுகின்றனர். இந்த ஆலயத்தைப் பற்றி பல்வேறான நம்பிக்கைகள் இருந்தாலும், ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முக்கிய கடவுளான மா சக்கும்பரி, மகிஷாசுர் மகா டெய்ட்டியா என்ற எதிரியைக் கொன்று, ஒவ்வொரு மாத முடிவிலும் ஒரு முறை சைவ உணவை மட்டுமே உண்டு, 100 வருடங்கள் டப்பாசியா என்ற பூசையை நிறைவேற்றி வந்ததாக இந்த பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் உறுதியாக நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications