16-ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்ட சமலேஸ்வரி கோவில் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் ஸ்ரீ ஸ்ரீ சமலோஸ்வரி தேவிக்காக கட்டப்பட்டுள்ள கோவிலாகும்.
இந்த பெண் கடவுளை அவருடைய பக்தர்கள் 'அம்மா' என்று பக்தியுடன் அழைப்பார்கள். இந்த பெண் தெய்வம் சம்பல்பூரில் மட்டுமல்லாமல் ஒடிசா மற்றும் சட்டிஸ்காரிலும் வணங்கப்பட்டு வருபவராக உள்ளார்.
சமமேலஸ்வரி அம்மாவின் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கல்லின் கீழ் பகுதியில் தண்டு போன்ற அமைப்பு உள்ளது. மனிதனால் வடிவமைக்கப்படாதது என்றும், இந்த சிலை இப்பொழுது இருக்கும் நிலையிலேயே கண்டறியப் பட்டுள்ளது என்றும் நம்பப்படுகிறது.
இக்கடவுளின் முகம் மற்றும் உடலில் தங்க ஆபரணங்கள் சாத்தப்பட்டுள்ளன. நவராத்திரி மற்றும் நுவாகாய் ஆகிய திருவிழாக்கள் இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஒட்டு மொத்த பகுதியும் அலங்காரம் கொண்டிருக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும் பண்டிகை நாட்களில் இந்த கோவிலுக்கு வருவது நல்லது. நுவாகாய் திருவிழாவின் போது, உள்ளூர் தற்காப்புக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை காட்டுவதையும் உங்களால் காண முடியும்.