சராஹனில் உள்ள பீமகாளி கோயில், இந்துக்களின் முக்கிய புனிதத்தலமாக உள்ளது. தேவி பீமகாளிக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோயில், குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. கோவிலின் கட்டிடக்கலை, இந்திய மற்றும் புத்த கட்டிடக்கலை பாணியை கலந்த ஒரு...
பீமகாளி கோயில் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள பறவைகள் பூங்கா, ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக இங்கு விளங்குகிறது. மயில் போன்ற ஒரு வகை கோழியின் இனப்பெருக்க மையத்தையும், இவ்விடத்தை தாயகமாக கொண்ட மோனல் என்ற பறவை இனத்தையும் காணலாம்.
இந்த பறவையினங்கள் தற்போது...
பாபா பள்ளத்தாக்கு, சராஹனிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஒரு முக்கிய சுற்றுலத்தலமாகும். ஒரு நீர்த்தேக்க ஏரி மற்றும் ஆல்பைன் புல்வெளிகள் சூழப்பட்ட இந்த அழகான பள்ளத்தாக்கு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் எழில்மிகு காட்சிகளைத் தருகிறது.
இந்த...
சராஹனின் ஜியோரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பஞ்சாரா ரெட்ரீட், ஆப்பிள் தோட்டங்களாலும், ஸ்ரீகண்ட் சிகரத்தின் திகைப்பூட்டும் காட்சிகளாலும் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 22 ல் அமைந்துள்ள இந்த ரெட்ரீட், வருடம் முழுவதும் பார்வையாளர்களுக்காக...
சரஹனிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், கண்ணிற்கினிய இயற்கை காட்சிகளை நமக்கு வழங்குகிறது. பச்சைப்பசுமையான நிலப்பரப்பை கொண்டு, சுவையும், மணமும் கொண்ட ஆப்பிளை உற்பத்தி செய்வதாலும், இவ்விடம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
பஞ்சாரா ரெட்ரீட்டிலிருந்து 1.5 மணி நேர பயணத்தில் அமைந்துள்ள தரன்கதி, கடல் மட்டத்திலிருந்து 932 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இடம் அதன் அழகான இயற்கை மற்றும் பசுமையான தாவரங்கள் நிறைந்த பச்சை காடுகளைக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 22 ல் அமைந்துள்ள ஜியோரி, சராஹனிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே உள்ள ஒரு வெந்நீரூற்று வசந்தகாலத்தில் தூரத்திலிருந்து வரும் பார்வையாளர்களை கவர்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 5155 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ், இந்துக்களின் அழிவுக்கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற புனிதத்தலமாகும்.
புராணப்படி இங்கு சிவன் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரும் காவியமான மகாபாரதத்தின்...
ராஜா புஷைர் அரண்மனை ஒரு 200 ஆண்டுகால பழமையான நினைவுச்சின்னம். கின்னாரை ஆண்ட புஷைரின் ராம்பூர் அரசர்களால் இது கட்டப்பட்டது. அரண்மனையின் கதவுகள் அற்புத வெண்கல பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளே கூடத்தில் ஒரு பெரிய ஃப்ளாக் ஸ்டோன் உள்ளது....