ராஜஸ்தானிலுள்ள சரிஸ்கா தேசிய இயற்கைப்பூங்காவுக்கு உள்ளேயே இந்த நீலகண்ட மஹாதேவ் கோயில் வளாகம் அமைந்துள்ளது. சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தின் நுழைவாயிலிலிருந்து 32 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது.
இந்த பிரம்மாண்டமான கோயில் வளாகம் 300 கோயில்களின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் சில கோயில்கள் இன்றும் பக்தர்களால் வணங்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும்.
நீலகண்ட மஹாதேவ் கோயிலைச் சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுவதால் இது ரம்மியமான சூழலைக்கொண்டுள்ளது. இடிபாடடைந்த நிலையில் காணப்பட்டாலும் இந்த கோயிலை ஒரு அருங்காட்சியகம் என்று சொல்லும் அளவுக்கு இதில் கலையம்சங்கள் நிறைந்துள்ளன. 6ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சேர்ந்த இந்தக் கோயில்களில் அற்புதமான கற்சிற்ப வடிப்புகள் காணப்படுகின்றன.