சரிஸ்கா தேசிய இயற்கைப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ள இந்த கனக்வாரி கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாக கருதப்படுகிறது. தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் ஒருகாலத்தில் ஔரங்கசீப் தன் சகோதரரான இளவரசர் தாரா ஷீக்கோவை இந்த கோட்டையில் சிறைப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த கோட்டையிலிருந்து சுற்றிலும் காணப்படும் புலிகள் பாதுகாப்பு வனச்சரகத்தை பார்த்து ரசிக்க முடிவது இதன் கூடுதல் சிறப்பாகும்.