சாத்தால் சுற்றுலாத்தலத்தின் பிரதான பொழுதுபோக்கு அம்சம் இந்த போட்டிங் எனப்படும் படகுச்சவாரியாகும். இங்குள்ள ஏரிகளில் படகுப்பயணம் செய்தபடியே சுற்றிலும் வானோங்கி நிற்கும் இமயமலைச்சிகரங்களை பார்த்து ரசிக்கலாம்.
பௌர்ணமி நாளின் முழுநிலவு வெளிச்சத்தில் இங்கு படகுப்பயணம் செய்ய முடிந்தால் அது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.