சியோனி மாவட்டத்தின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றான இந்த சிவ ஆலயம் சியோனி மாவட்டத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள `கட்டல்போடி' என்கிற கிராமத்தில் உள்ளது.
இந்த புகழ்பெற்ற கோயில் பெரிய இந்திய தத்துவ ஞானி மற்றும் ஜகத்குருவான ஆதி சங்கர பகவத்பாதள் நினைவாக 2003 ம் ஆண்டில் கட்டப்பட்டது. ஒரு அழகான பகுதியில் கட்டப்பட்ட, இந்த கோவிலின் காட்சியானது பார்வையாளர்களின் மனதை மயக்குகிறது.
பக்தர்கள் இந்த கோவிலின் மீது மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்கின்றனர். இந்த சிவ ஆலயம் உள்ளூர் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சுற்றுலா பயணிகளிடமும் பிரபலமாக உள்ளது.
இது கட்டப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் இந்த அழகிய கோவிலுக்கு வருகை தருகின்றனர். கோவில் வளாகத்தின் அழகு மற்றும் இங்கு நிழவும் தெய்வீக சூழ்நிலை மனதிற்கு அமைதியையும் தூய்மையையும் அளிக்கி