காளி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இந்தப்புனிதத்தலம் இந்தியா முழுவதிலும் இருந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடும் இடமாக உள்ளது. இந்த மலை உச்சி வரை யார் கடினப்பயணம் மேற்கொள்கின்றார்களோ அவர்கள் தேவியின் ஆசீர்வாதம் பெறுவர் என்றும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது மக்கள் மத்தியில் நிலவும் பொதுவான நம்பிக்கை.
இந்தப்புனித இடம் நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ப்ராஸ்பெக்ட் ஹில்லில் அமைந்துள்ளது மேலும் பொய்லியுகஞ்சிலிருந்து கால்நடையாகவே அடைந்து மேலும் மலையின் மேல் ஏற வேண்டும். பைன் மற்றும் தேவதாரு மரங்கள் சூழ்ந்துள்ள இந்த இடமானது கண்ணிற்கினிய காட்சியை அளிக்கிறது.



Click it and Unblock the Notifications