சிப்சாகர் நகரில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது பனி திஹிங் பறவைகள் சரணாலயம். திசாங் மற்றும் திமோவ் ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 33 சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஈரப்பதம் மிக்க இடமாக இருக்கிறது.
வருடா வரும் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் இல்லமாக விளங்குகிறது பனி திஹிங் பறவைகள் சரணாலயம். 1996-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது பனி திஹிங்.
நீர்ப் பறவை, அட்ஜூடண்ட் ஸ்டார்க்ஸ், வாத்து வகைகள் மற்றும் மீன்பிடி கழுகுகள் போன்ற அரிதான பல்வேறு பறவைகள் இந்த சரணாலயத்துக்கு வருகின்றன.
பார் வடிவ தலை கொண்ட வாத்து, ஸ்பாட் பில்டு வாத்துகள், கட்வாள், மல்லார்டு, ஷோவெலர், காமன் பொச்சார்டு, ஓபன் பில் வாத்துகள் என பல்வேறு வகையான பறவைகளை இந்த சரணாலயத்தில் காண முடியும்.
நவம்பர் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை அதிக அளவில் பறவைகள் இருக்கும். ஆகையால் சுற்றுலா வர விரும்புபவர்கள் இந்த மாதங்களில் செல்வது சிறப்பு. சிப்சாகரில் இருந்து 22 கிமீ தொலைவில் அருகில் இருப்பதால், சாலை வழியாக எளிதில் இங்கு செல்ல முடியும்.



Click it and Unblock the Notifications