பிரம்மபுரீஸ்வரர் ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள சட்டநாதசுவாமி கோவில் சீர்காழியிலுள்ள ஒரு ஆன்மீக யாத்திரை தலமாகும். சிவபெருமானின் பைரவ கோலத்தில் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார்.
இங்கிருந்து பார்த்தால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் அனைத்து காட்சி எழிலையும் கண்டு இன்புறலாம். இக்கோவிலிலுள்ள அனைத்து கோபுரங்களும், மண்டபங்களும் பாரம்பரிய தென்னிந்திய இந்து கோவில் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளன.
பிரகாரத்திற்கு வெளியில் அமைந்துள்ள மைதானம் மிகப் பெரியதாகும். இங்கு வரும் மக்கள் இளைப்பாறவும், மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்யவும் இவ்விடத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மகாசிவராத்திரி காலத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து வருகை புரியும் மக்களால் இக்கோவில் நிரம்பி வழியும். சீர்காழி நகரத்தில் மேலும் பல ஆலயங்கள் அமைந்து மக்களையும், மதத்தையும், இறைவனையும், இறை நம்பிக்கையால் இணைக்கின்றன. இக்கோவில்கள் சீர்காழிக்கு கோவில்நகரம் என்ற பெயரையும் ஈட்டிக்கொடுக்கின்றன.



Click it and Unblock the Notifications