பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களுள் பிரம்ம தீர்த்தமும் ஒன்று. இத்தீர்த்தத்திலிருந்துதான் பிரம்மதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்தாராம்.
இத்தீர்த்தமானது இங்குள்ள திருக்குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்குளத்தில் நீராடித் தமது பாவங்களைப் போக்கிக்கொள்ள தொலைதூரங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
இத்தீர்த்தத்தில் நீராடினால் உடலோடு மனமும் தூய்மையாகும் என்ற நம்பிக்கை உள்ளது. நிலையில்லாத இவ்வுடலுக்கு ஏற்பட்ட பாவங்களை களையவும் மனதைத் தூய்மையாக்கவும், இப்புனிதமான் பிரம்ம தீர்த்தத்தில் நீராடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
ஏராளமான பக்தர்கள் வருவதைக்கருத்தில் கொண்டு, கோவிலைத் தூய்மையாகவும், வசதிகளுடனும் பராமரிக்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.