சோலன் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாக நலகார்க் அரண்மனை திகழ்ந்து வருகிறது. நலகார்க் பட்டணம் இமாச்சல பிரதேசத்திற்கு நுழைவாயிலாக கருதப்படுகின்றது.
ஒரு காலத்தில் இந்தூர் மாநிலத்தின் தலைநகரமாக இது திகழ்ந்தது. அரசர் சுரேந்திர சிங் நலகார்கின் கடைசி அரசர் ஆவார், தற்போது அவருடைய மகன் விஜயேந்திரா அவ்விடத்தின் சடங்காச்சார தலைவராக இருக்கிறார்.
இவ்விடம் இந்திய மற்றும் முகலாய கலைகளின் கலவையாக இருக்கும் கட்டடக்கலைக்கு பெயர்பெற்றதாக இருக்கிறது. சமீபத்தில் இது ஒரு உயர்தர ஓய்விடமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.