காட்டு மயிலுக்கான சரணாலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நன்னஜ் பகுதி முதலில் திரு பி. எஸ். குல்கர்னி எனும் பறவை ஆராய்ச்சியாளரால் 1971ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்சமயம் இது எல்லோராலும் அறியப்பட்ட சரணாலயமாகவும் சர்வதேச சுற்றுலா மையமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டு மயில் இங்கு உள்ளூர் மொழியில் ‘மல்தோக்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிய வகை பறவையாகும். மயிலைப்போன்று இருக்கும் இந்தப் பறவை மயில் அல்ல.
உருவத்தில் பெரிதாகவும் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கலந்து தோற்றமளிக்கும் இது சாதாரணமாக வறண்ட மற்றும் வறண்ட புல்வெளிப்பகுதிகளில் வசிக்கிறது. ஆண் காட்டு மயில் 122 செ.மீ நீளமும் பெண் காட்டு மயில் 92 செ.மீ நீளமும் இருக்கும்.
இந்த சரணாலயம் ஏறக்குறைய 8500 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இதற்குள் 14 ம் நூற்றான்டில் கட்டப்பட்ட ஒரு முஸ்லிம் கோட்டையும் காணப்படுகிறது.காட்டு மயில் தவிர இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கீரி, இந்திய நரி, கறுப்பு மான் மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.