சோலாப்பூர் மாவட்ட த்தில் அமைந்துள்ள ஜைன திருத் தலங்களின் ஒன்றான இது இந்த பெயரிலேயே அழைக்கப்படும் கிராமத்தில் உள்ளது.
இந்த வழிபாட்டுத்தலம் 244 செ.மீ உயரத்தில் கருப்பு நிறத்தில் காணப்படும் மஹாவீரர் சிலையைக் கொண்டுள்ளது. பத்மாசன கோலத்தில் இந்த சிலை அமர்ந்துள்ளது. விக்ரம பஞ்சாங்கத்தின்படி1889 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ‘மஹட்டிசாகர்ஜி மஹராஜ் சாஹேப்’பின் பாதச்சிலைகள் இங்கு காணப்படுகின்றன.
இந்த கோயில் சுவர்கள் பல விதமான அலங்கார வேலைப்பாடுகளை கொண்டு கலையம்சத்துடன் விளங்குகிறது. திகம்பர ஆச்சாரியார்களின் வண்ண ஓவியம் மற்றும் இதர ஓவியங்கள் சுவற்றில் காணப்படுகின்றன.
இங்கு வரும் பக்தர்களுக்காக மஹட்டிசாஹர்ஜி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் துன்பங்களும் சாபங்களும் தீரும் என்று ஐதீகமாக நம்பப் படுகிறது.இந்த ஆன்மீக ஸ்தலத்தை சோலாப்பூர் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் அடையலாம்.



Click it and Unblock the Notifications