சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்குமாறு ஒரு அழகான ஏரியின் நடுவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த கோயில். சோலாப்பூர் நகரத்தின் மொத்தப் பகுதியிலேயே எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக இந்தக் கோயில் பெற்றுள்ளது.
இந்த குளமும் அதனுள் அமைந்த கோயிளும் ஷீசைலத்தில் குடிகொண்டுள்ள ஷீ மல்லிகார்ஜுனா கடவுளின் தீவிர பக்தரான ‘ஷீ சித்தராமேஷ்வர்’ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் சிவனும் விஷ்ணுவும் ஒரே பெயரில் அறியப்படும் அவதாரமான சித்தேஷ்வரின் விக்கிரகம் உள்ளது. ஏரியின் நடுவில் உள்ள கோயிலின் பிரகாரத்தில் நுழைவதற்கு மூன்று வாசல்கள் காணப்படுகின்றன.
கோயிலில் ஒரு நந்தவனமும் அதனுள்ளே நலத்வத் யோகிக்கு ஒரு சிறு கோயிலும் உள்ளன. கோயில் வளாகத்தில் விதோபா மற்றும் ருக்மணி தெய்வங்களுக்கான சிறு கோயில்களும் உள்ளன. சோலாப்பூருக்கு வரும்போது இங்கு அவசியம் வந்து பார்ப்பது சிறந்தது.



Click it and Unblock the Notifications