1632-ல் உருவாக்கப்பட்ட சஸ்ம்-இ-ஷாஹி, 108 மீ நீளம் மற்றும் 38 மீ அகலத்துடன் ஸ்ரீ நகரின் மிகச்சிறிய முகலாய தோட்டங்களில் ஒன்றாக உள்ளது. 'இராயல் ஸ்பிரிங்' என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் இந்த தோட்டம், கால்வாய்ப் பாலம், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீரூற்றுகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நேரு நினைவு பூங்காவிலிருந்து பார்க்கும் தொலைவிலேயே உள்ள இந்த தோட்டம், இமயமலை மற்றும் தால் ஏரியின் மாபெரும் கண்கவர் காட்சிகளை காட்டவல்ல இடமாகும்.
பல்வேறு விதமான பழங்கள் மற்றும் அரிய வகை பூக்கள் இந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த தோட்டத்திற்கு இருக்கும் ஒரு நன்னீரூற்றுக்கு மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுவதால், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இது உள்ளது.



Click it and Unblock the Notifications