ஸ்ரீ நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஹர்வான் தோட்டங்கள் மிகவும் பரந்த சுற்றுலா தலமாகும். இந்த தோட்டத்தின் மையப்பகுதிகளில், சர்பான்ட் என்ற பெயரையுடைய வாய்க்கால் சினார் மரங்களை வேலிகளாகவும், பூக்களை தரையாகவும் கொண்டு ஓடிக் கொண்டிருப்பது இத்தோட்டத்தின் அழகை மேலும் கூட்டுவதாக உள்ளது.
இவ்விடத்தின் மிகவும் பழமையான நீர்த்தேக்கமான இதற்கு டச்சிகாம் நல்லா-வில் இருந்து தண்ணீர் வருகிறது. எனினும், ஸ்ரீ நகரின் புகழ் பெற்ற தோட்டங்களைப் போல, வாய்க்கால் நீரூற்றுகள் எதுவும் ஹர்வான் தோட்டங்களில் கிடையாது.
இங்கு வரும் சுற்றூலாப் பயணிகள் இதன் நீண்ட புல்வெளிகளில் இயற்கை நடை பயணம் செய்வதை மிகவும் விரும்புகின்றனர். அருகிலிருக்கும் மகாதேவ் மலைகளுக்கு மலையேற்றம் செல்வதற்கான துவக்க இடமாக ஹர்வான் தோட்டங்களைச் சொல்லலாம்.
மேலும், டச்சிகாம் வனவிலங்கு சரணாலயம் செல்வதற்கு மிகவும் ஏற்ற நுழைவாயிலாக ஹர்வான் தோட்டங்கள் விளங்குகின்றன. ஸ்ரீ நகரிலுள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ் பெற்ற இடமாக உள்ள ஹர்வான் தோட்டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அவர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications