ஸ்ரீ நகரில் ஜீலம் நதிக்கரையில் சிக்கந்தர் சுல்தானால் கி.பி.1400-ம் ஆண்டு கட்டப்பட்ட ஷா-இ-ஹம்தான் மசூதி மற்றும் கன்ஹா-இ-மொல்லா ஆகியற்றிற்காக புகழ் பெற்றுள்ள பெயர் தான் ஷா ஹம்தானின் கன்ஹா என்பதாகும்.
ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய மதத்தை முதன் முதலாக பிரபலப்படுத்திய முஸ்லீம் துறவியான மீர் சையது அலி ஹம்தானி என்பவரை கௌரவப்படுத்தும் விதமாகவே இந்த மசூதி கட்டப்பட்டது.
இஸ்லாமிய சந்திர ஆண்டுகளின் கடைசி மாதமான துல்-ஹஜ்-ன் 6-வது நாளின் போது மீர் சையது அலி ஹம்தானியின் இறந்த நாள் இந்த மசூதியில் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
இந்நாட்களில் பெருமளவிலான பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை செய்வதற்காக இந்த மசூதிக்கு வருவார்கள். அழகிய மர வடிவமைப்பில், கலைநயத்துடன் செதுக்கப் பட்டுள்ள கூரையையும் மற்றும் தொங்கிக் கொண்டிருக்கும் மணிகளையும் கொண்டதாக இந்த வழிபாட்டுதலம் உள்ளது.
இந்த தலத்தின் உட்புற சுவர்களில் வரலாற்று எழுத்துக்கள் மற்றும் மத விளக்கவுரை ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications